Tuesday, April 28, 2009

இந்து மதத்தை ஏன் வெறுக்கிறேன்.?

மனிதனாய் பிறந்த யாரும் மதம் சார்ந்து வாழ்வார்கள் ஆனால், அவர்கள் பிற்போக்கு வாதிகள்தான்.எல்லா மதங்களும், என்னை அப்படியே நம்பு,கேள்விகேட்காதே என்று கூறி, மடத்தனத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் இந்து மதம் மட்டும்தான் மடத்தனத்தோடு, தீண்டாமையையும் சொல்கிறது.

பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பிராமிணன், தோளில் பிறந்தவன் சத்ரியன், வயிற்றில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் ,என்ற வர்ணகோட்பாடு இந்து மதத்தில் தான் இருக்கிறது. இதை கிருஷ்ணனும் பகவத்கீதையில் அர்ச்சுனனிடம் போதனை செய்திருக்கிறார். ராமரும் ராமாயணத்தில், சம்பூகன் என்ற சூத்திரனை , வேள்வி செய்ததற்காக கொலைசெய்கிறான். மகாபாரதத்தில் ஏகலைவன் என்ற வேடன், வில் வித்தை கற்றுகொண்டானே , என்று துரோணர் கோபப்பட்டு, அவன் கட்டை விரலை காவுவாங்குகிறார்.

புராண, இதிகாச ஆதாரப்படி, கடவுளின் பெயரால் தான்,இங்கு சாதி தோற்றுவிக்கப்பட்டது என்பது, நிதர்சனமான உண்மை.

இந்து மத கடவுள்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சொந்தகாரர்கள் தான். ஆகசாதி ஒழிப்பை விரும்பும் ஒருவன் எவன் ஆயினும், சாதியை உண்டாக்கிய இந்த கடவுள்களை நம்பி வழிபட மாட்டான். அந்த கடவுள் சார்ந்த மதத்திலேயும் இருக்க மாட்டான்.

இல்லை சாதி ஒழிப்பை ஏற்று கொள்கிறேன், ஆனால் கடவுள் ஒழிப்பை ஏற்றுகொள்ள முடியாது என்று ஒருவன் கூறுவான் ஆயின், அவன் எவ்வளவு படித்தவன் ஆயினும்,உயர்ந்த பதவியில் இருந்தாலும்,அந்த கடவுள் கூறியபடி கீழ்சாதி மகனே ஆகிறான், என்பது மறுக்க முடியாத உண்மை.

சாதியை தோற்றுவித்த கடவுளை வழிபடும் வரை, சாதி ஒழிப்பு என்பது நம்மைநாம் ஏமாற்றும் வேலையே......

சுவாசிப்பவர் எல்லாம் மனிதர் அல்லர்;
சுயசிந்தனை செய்பவரே மனிதர்.

.சீனிவாசன்.
,

Saturday, April 25, 2009

பேய் பிடித்தல்,சாமியாடுதல் உண்மையா?


எதார்த்தமாக இன்று அந்த நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. இன்னும் இது போன்ற நிகழ்வுகள் அதுவும் தமிழகத்தின் தலை நகரத்திலே நடை பெறுவதை கண்டு சற்று யோசிப்பார்த்தால் , நாம் அறிவியலுக்கு எட்டாத தூரத்தில் தான் உள்ளோம் என்று எனக்கு என்ன தோன்றியது.


ஒரு வாலிபன் சற்றே சோர்ந்த நிலையில் அமர்ந்து இருக்கிறான். அவன் அருகில் ஒரு வயதான பெண் கையில் சூலாயிதமும் , வேப்பிலையும் வைத்து நின்று கொண்டு இருந்தார். அவர்களை சுற்றி கூட்டம்.என்ன நடக்கிறது என்று சற்று நின்று பார்க்க எண்ணினேன். அந்த பெண்மணி ,அந்த வாலிபனின் தலை மயிரை பிடித்து , ஆட்டிக்கொண்டு இருந்தார். நீ யார்? என்ன வேண்டும் உனக்கு என்று மிரட்டி கேட்டு, சூலாயிதத்தில் குத்தி கொண்டும் இருந்தார். அந்த வாலிபன் ஏதோ உளறி கொண்டு இருந்தான். எனக்கு புரிந்து விட்டது. அவர்கள் பேய் ஓட்டுகிறார்கள் என்று.


அவர்களுக்கு வேண்டிய பதிலை(எதிர்பார்க்கும்), அவனை குத்தி , குத்தி வாங்கி கொண்டு இருந்தனர். உதாரணமாக நீ பேய் தானே என்று இரண்டு முறை குத்தி கேட்டால், அவனும் வலி தாங்காமல், ஆமாம் என்றான். நீ செத்து போன சுமதி தானே என்றால், அமைதியாக இருக்கிறான், மீண்டும் குத்துகிறார்கள், ஆமாம் என்கிறான்.அவன் இல்லை என்றாலும், ஆமாம் என்கிறவரை அடிப்பார்கள். ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் ஒத்து கொள்கிறான்.


அந்த பேய் ஓட்டும் பெண்மணியை , ஏதோ பெரிய அறிவியல் மேதை போல , சுற்றி நிற்பவர்கள் பார்த்து கொண்டும், அவள் கேட்கும் கற்பூரம், வேப்பிலை மற்றும் பேய் ஓட்டும் உபகரணங்களை ,கொடுத்து கொண்டும் இருந்தனர். இது போன்ற மக்களின் அறியாமையை சிலர் பயன்படுத்தி பணம் சம்பாதித்து கொண்டுதான் இருக்கின்றனர்.


இது ஒரு மனோ ரீதியான நோய் , என்று எனக்கு என்ன தோன்றியது. அவன் ஆழ்மனதில் ஏற்ப்பட்ட ஏதோ பிரச்சினையின் நிகழ்வு என்பதை என்னால் உணர முடிந்தது. என் சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு , என்னால் விளக்க இயலவில்லை.விளக்க முற்பட்டு இருந்தால், எனக்கும் பேய் ஒட்டி இருப்பார்கள் , கூடியிருந்த கூட்டம் அப்படி.பின் நான் மன வருத்தத்துடன் அங்கிருந்து செல்ல நேரிட்டது.


நான் வலையை அலசியதில் எனக்கு கிடைத்த தகவல்களை பதிவு செய்கிறேன்.


(பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையதே. இவையெல்லாம் படிப்பறிவில்லாத பழைய கிராமங்களில் நடைமுறையிலிருந்த வழக்கங்கள். தற்போது இந்த வழக்கங்கள் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இருப்பினும் ஒரு சிலரிடம் இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒரு சிலருக்கு உள் மனத்தில் மற்றவர்களது கவனத்தைக் கவர வேண்டுமென்கிற ஒரு ஆசை இருக்கும். இதனை டிப்ரசிவ் சைக்கோசிஸ் (Depressive psychosis) என்று சொல்வார்கள். மேலும் பெண்களுக்கு சமுதாயக் கட்டுப்பாடுகளால், உள் மனதில் சில அடக்கி வைக்கப்பட்ட ஆசைகள் இருக்கும். இவையே பின்னர் அடக்க இயலாமல் வெளிக் கிளம்பும் போது ஹிஸ்டீரியா எனும் நோயாக மாறுகிறது. இந்த நோயுடையவர்கள்தான் பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் போன்ற செயல்களில் இறங்குகின்றனர். இதனை மருத்துவ ரீதியாக, நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை செய்து குணப்படுத்தலாம். மனத்தில் உள்ள எண்ணங்களைச் சிதற விடாமல் ஒருநிலைப் படுத்துவதன் மூலம் குணப்படுத்தலாம். இதற்குஹெட்டிரோசஜன்’ (Hetrosuggestion) என்று பெயர். இதற்கு தகுந்த மனநல மருத்துவர்கள் ஆலோசனையுடன் பென்டதால் சோடியம் (Pentathol Sodium) , ஈதர் (Ether) ஆகிய மருந்துகளை எடுத்து உள் மன உணர்வுகளை அறிந்து எண்ணங்களை ஒருநிலைப் படுத்தலாம். இந்த நோய் பெரும்பாலும் மத உணர்வு மற்றும் கடவுள் நம்பிக்கை அதிகமுடையவர்களுக்குத்தான் வருகிறது.)


.சீனிவாசன்.

Thursday, April 23, 2009

ஈழம், அரசியல் மற்றும் தமிழன்

வெள்ளியில் மறித்து, ஞாயிறில் உயிர்த்தெழ கர்த்தருக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. ஈழத்தமிழனுக்கு அதுவும் இல்லை.

சிங்கள குண்டுகளால் சதை பிளந்து, ரத்தம் பீறிட்டு, உறுப்புகள் சிதைந்து, செத்துபோவதை தவிர அவனுக்கு வேறு வாய்ப்பில்லை.தமிழன் செத்தால் கேட்பதற்கு ஒரு நாதியும் இல்லை.

ஆம் இப்போது ஈழத்தின் தமிழன் கடவுளாலும் கைவிடப்பட்டவன்.
இந்த யுத்தத்தை மிக நேரடியாக நடத்துவது இந்தியா தான்.குறிப்பாக, காங்கரசும் சோனியா காந்தியும் தான் இதன் சூத்திரதாரிகள்.ஆனால் தமிழர்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்திக்கொண்டு, அதே தமிழர்களிடம் எந்த பயமும், மனசாட்சியும் இல்லாமல் ஓட்டு வாங்க வருகிறார்கள்.

" நாய் அடிபட்டு செத்தால் கூட ப்ளூ கிராஸ் வரிகிறது. காசாவில் பாலஸ்தீனியர்கள் தாக்கப்பட்டால் உலக நாடுகள் அலறுகின்றன.ஆனால், மனித குல வரலாற்றில் ஹிட்லரையும் மிஞ்சிவிட்ட மகிந்திரா ராஜபக்ஷேவை அதட்டி ஒடுக்க சர்வதேசங்களுக்கு தயக்கம்.காரணம் இந்தியா.

தெற்க்காசிய பிராந்தியத்தின் பேட்டை ரவுடியாக இருக்கும் இந்தியாதான் இலங்கை போரை நடத்துகிறது என்பதால், இந்த பிரச்னையில் தலையிட மற்ற நாடுகள் தயங்குகின்றன.

ஈழதமிழனுக்கு எதிரான போரை முன்னின்றும் பின்னின்றும் நடத்தும் காங்கரஸ் அரசு, சோனியா காந்தியும் நாளை தமிழ்நாட்டு தமிழனுக்கு எதிராகவும் திரும்ப மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?

இறப்பின் வலி சோனியாவிற்கு தெரியும். ஒற்றை உயிரை இழந்ததர்க்கே அவருக்கு இவ்வளவு வலி இருக்கும் என்றால், லட்சகணக்கான தமிழர்களை கண்ணுக்கு முன்னால் சாககொடுக்கும் எங்களுக்கு எவ்வளவு வலி இருக்கும்?

சீக்கியர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பீர்கள், தமிழன் என்றால் ராணுவத்தை அனுப்பி கொலை செய்வீர்கள். நாங்கள் மட்டும் இந்தியர்கள் இல்லையா?

கொலை செய்தவனை விட கொலைக்கு திட்டம் தீடியவனும், ஆயுதம் கொடுத்தவுனுமே பெரிய குற்றவாளிகள். அந்தவகையில் இந்தியாதான் மிகபெரிய குற்றவாளி.

இந்த கொடுமையை எதிர்த்து நம்மால் போரிட முடிய வில்லை அதனால் நாம் போராளிகளோ அல்லது வீரர்களோ இல்லை.

முத்துக்குமரைபோல தற்கொலை செய்து கொள்ள நாம் கோழைகளோ இல்லை.

நாம் அனைவரும் கைஆலாகாதவர்கள் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

நம் வாழ்க்கை நம் சூழல் என்று வாழும் இந்த நிலையில் மற்றவர்களுக்காக வெறும் அனுதாபம் மட்டும் தான் நம்மால் தர முடியும்.
ஆனால் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக,இந்த இனப்படுகொலையை எதிர்த்து இருபது பெண்கள் சென்னையில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவகமான தாயகத்தில் 10 நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

முடிந்தால் நாம் அனைவரும் அந்த உண்ணாவிரத பந்தலுக்கு சென்று அவர்களை சந்தித்து நம் ஆதரவை தெரிவிப்போம்.


ப.ச.பன்னீர் செல்வம்

Tuesday, April 21, 2009

தமிழன் என்றால் பொருள் என்ன இளிச்சவாயனா?

தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஈழம் என்ற போர்வையை எடுத்து போர்த்தி கொள்ள ஆரம்பித்து விட்டன.யாருக்கு வாக்களிப்பது?. குழம்பி நிற்கிறான் தமிழன். பாவம் என்ன செய்வான்? அவனை யாரும் இங்கே மனிதனாக பார்ப்பதில்லை. ஒரு வாக்காளனாக தான் பார்கின்றனர்.

இங்கே இருவகையினர் தான். ஓன்று பாமரத் தமிழன்,மற்றொருவன் படித்த தமிழன். பாமரத் தமிழன் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டால், ஏதோ ஒரு கட்சியின் பெயரை கூறுவான். ஏன் அந்த கட்சிக்கு உனது வாக்கு என்றால், நான் இருபது வருடமாக அதற்குதான் வாக்களித்து வருகிறேன், இனியும் அதற்குதான் வாக்களிப்பேன் என்பான். இல்லையெனில் போன தேர்தலுக்கு அந்த கட்சிக்கு ஒட்டு போட்டேன். இந்த தேர்தலுக்கு இந்த கட்சிப்பா என்று தன் அறியாமையின் உட்சத்தை வெளிப் படுத்துவான். படித்தவனின் நிலைமையோ இன்னும் மோசம், ஏம்பா அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையை கேட்டியாப்பா என்றால், அவன் நம்மிடம் IPL மேட்சைப் பார்த்தியா?, அயன் படத்தைப் பார்த்தியா என்று மறு கேள்வி கேட்கிறான். இதுதான் இங்கே நிலைமை. அரசாங்கம் சரியில்லை, அரசியல் வாதிகள் சரியில்லை என்று கூறும் படித்த இளைஞர்கள் , தான் ஒரு சரியான குடிமகனா என்பது பற்றி என்றும் சிந்திப்பதில்லை. இதைதான் ஆளும் வர்க்கம் , தன் சுய லாபத்திற்காக பயன் படுத்தி கொள்கிறது.

தமிழ் நாட்டில் தற்போது எத்தனை தேர்தல் அணி உண்டு என்றே கணக்கிட முடியாது போல.
1.தி.மு.க தலைமையில் காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் ஒரு அணி.
2.அ.தி.மு.க தலைமையில் பா.ம.க , ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்சிக்ஸ் கம்யூனிஸ்ட் ஒரு அணி.
3.பா.ஜ.க தலைமையில் ச.ம.க, நாடாளும் மக்கள் கட்சி ஒரு அணி.
4.தே.மு.தி.க தனித்து போட்டி.
5.ஒவ்வொரு தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளர்கள்.

ஒவ்வொன்றாக அலசுவோம்.

தி.மு.க

பெரியார் பாசறையில் வளர்ந்த அண்ணா தோற்றுவித்த கட்சி. 1967 லில் மொழி போராட்டத்தில் பல உயிர் தியாகங்களை செய்து, காங்கிரசை டெல்லிக்கு அடித்து ஒட்டி, அரியணை ஏறியது. ஆரம்பத்தில் தமிழனின் நலனுக்காக போராடிய கட்சி, இன்று குடும்ப நலனுக்காக போராட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. நாட்டுப் பிரச்சினையை விட தலைவருக்கு குடும்ப பிரச்சினையை தீர்பதற்கே அதிக நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. மகன் ஸ்டாலின் இளைஞர் அணி தலைவர்.(பேரக்குழந்தையையே பெற்று விட்டார்) ,மகள் கனிமொழி மகளிர் அணி தலைவி, மகன் அழகிரி தென் மாநில தி.மு.க வளர்ச்சி தலைவர்,
அடுத்து ஓன்று தான் பாக்கி, தன் பேரக் குழந்தையை , தி.மு.க குழந்தைகள் அணி தலைவராக்க வேண்டியதுதான்.


கலைஞர் அவர்கள் தமிழின தலைவர் என தானே கூறிக்கொள்வார், அது என்னவோ மேடையில் தன்னை மத்தியில் அமர வைத்து ,சுற்றி கவிஞர் பெருமக்கள் சுதி பாடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி ஈழமக்களுக்கு போராட்டம் நடத்துவார். கண்ணீர் விடுவார், மத்திய அரசிடம் ராஜீனாமா கடிதம் கொடுப்பார், தந்தி அடிப்பார், உயிரை விடுவதாக கூறுவார், பிரபாகரனை சர்வாதிகாரி என்பார், சகோதர யுத்தம் பற்றி பேசுவார், பின் அவரே LTTE தீவிரவாத இயக்கம் இல்லை என்று கூறுவார். சிவாஜிக்கு பதில் இவருக்கு கொடுத்திருக்கலாம் நடிகர் திலகம் பட்டம்.

மத்தியில் ஆளும் ஆட்சியில் பங்கு வகிக்கும் இவர் ஏன் காங்கிரசை கெஞ்ச வேண்டும்? அங்கே இவர் செங்கோட்டையில் இருந்து வெளியேறினால், இங்கே காங்கிரஸ் ஜார்ஜ் கோட்டையில் இருந்து வெளியேறும். இப்படியாகிய குழப்பத்தில் ஒரு நல்ல முடிவு எடுத்துவிட்டார், ஆட்சியா, தமிழ் மக்கள் உயிரா? என்று தராசிட்டு பார்த்ததில், மக்கள் உயிர் மேலேறியது. பார்த்து கொள்ளலாம் இருக்கவே இருக்கு கலர் t.v , ஒரு ரூபாய் அரிசி........

.தி.மு.

எதற்காக இந்த அம்மா அண்ணா படத்தை வைத்து கொண்டுள்ளதோ என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை, பகுத்தறிவாதி அண்ணா, ஆனால் தன் கட்சியின் வேட்பாளர்களை கூட ஜோதிடம் பார்த்து எடுக்கும் மிகுந்த பிற்போக்கு வாதி.இந்த அம்மா.அப்பப்போ எதிர்கட்சியை விமர்சனம் செய்வது. தமிழினம் துரோகம் செய்வது, பார்ப்பனிய ஏகாதிபத்தியத்தை விட மறுப்பது, என சில சாதனைகள் இருந்தாலும் தற்போதைய சாதனை சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்வதாக தேர்தல் அறிக்கை விட்டது. மத உணர்வை புண்படுத்தும் திட்டமாம். என்ன ஒரு தெளிந்த சிந்தனை. மேலும் கொடுமை என்றால் நான் பிரதமர் ஆக விரும்பவில்லை என அடிக்கடி கூறிக்கொண்டு, தன் நமட்டு ஆசையை வெளிப்படுத்துவது.தற்போதைய ஒரு மெகா காமெடி தமிழ் ஈழம் அமைப்பாராம் ஆட்சிக்கு வந்தால்............இவர் தான் கூறினார் இரு மாதங்களுக்கு முன் போரில் மக்கள் இறப்பது இயற்கை என்று.என்ன செய்வார் தேர்தல் ஜுரம் அவருக்கும் இருக்காதா?

காங்கிரஸ்

காங்கிரஸ் என கூறுவதை விட தமிழின துரோகி என சுருக்கமாக கூறலாம். காந்தி தலைமையில் வெள்ளையனுக்கு ஜால்ரா போட்ட இந்த கட்சி, ஒரே ஒரு தமிழனால் தான் தமிழ் நாட்டில் இன்றும் உள்ளது. அவர் தான் காமராஜர். பெரியார் தான் போனால் போகட்டும் ஒரு தமிழன் ஆட்சி செய்யட்டும் என்று காமராஜிற்கு ஆதரவு தந்து அரியணை ஏற்றினார். ஆனால் பின்பு மீண்டும் இந்தி திணிப்பின் மூலம் தன் சுய உருவத்தை காட்டிய போது, அதன் பல்லை பிடிங்கி எரிந்தது , தி.மு.க. அன்று முதல் இன்று வரை ஒரு ஒட்டு கட்சி தான் இந்த காங்கிரஸ். தனித்து நின்றால் ஒரு ஒட்டு விழாது.

கட்ச தீவை இலங்கைக்கு கொடுத்தது, பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டை எதிர்த்தது. 6000 தமிழ் மக்களை ஈழத்தில் கொன்றது, . இன்றும் ஈழ விடுதலையை எதிர்ப்பது. அதற்க்கு ராஜிவ் காந்தியை கேடயமாக பயன் படுத்துவது, இலங்கைக்கு ராணுவ உதவி செய்வது...என தமிழின துரோகம் பல........

பா..

சாதிக் கட்சியாக ஆரம்பித்தது பின் பாட்டாளி மக்கள் கட்சி ஆனது. நானோ என் குடும்பத்தை சாந்தவரோ பதவிக்கு வந்தால் மக்கள் என்னை செருப்பால் அடிக்கட்டும் என்று கூறியவர் ராமதாஸ். இவர் ஒரு அரசியல் குரங்கு. ஆனால் ஓன்று இவர் எந்த பக்கமோ அந்த கட்சி அரியணை ஏறி விடுகிறது. ஈழத்தை முன் வைத்து தி.மு.க வை எதிர்க்கும் இந்த கட்சி ஏன் கடைசி வரை மத்தியில் ஆட்சி வகித்தது என்பது கேள்விக்குறி. இருப்பினும் மக்கள் தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறி வருகிறது. தமிழை வளர்க்க பாடுபடுகிறது. மது ஒழிப்பு, புகையிலை ஒழிப்பு என சில நல்ல கருத்துகளை முன் வைக்கும் இந்த கட்சி , கடைசியில் சாதி ஒட்டு பெறவே அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம், கள்ளகுறிச்சி போன்ற தொகுதிகளை தேர்ந்தெடுத்து இருப்பது வேதனைக்குரியதுதான்.........

கம்யூனிஸ்ட்

ஒருங்கிணைந்த இலங்கை அமைவதே இவர்கள் நோக்கமாம், உலகிலேயே மிகவும் பிற்போக்கான கம்யூனிஸ்ட் நம் இந்திய கம்யூனிஸ்ட் தான். ராமர் இல்லை. ஆனால் சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்பவர்களின் உடன் கூட்டணி, கேட்டால் தேர்தல் வேறாம், கொள்கை வேறாம்.உங்கள் கொள்கை யாருக்கு, வைத்து பூஜை செய்வதா? பிடிப்பு இல்லாத ஒரு கட்சி. தர்க்க வாதம் பேசி பேசி , அடிப்படை மக்கள் தேவைகளை தீர்க்க முடியாத கட்சி. இருப்பினும் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வந்தால் ஒரு நல்ல ஆட்சி தர முடியும் என்பதில் சிறுது நம்பிக்கை இருக்கிறது.....

.தி.மு.

பொதுசெயலாளர் வைகோ , இனி அவர் மட்டுமே கட்சியில் இருப்பார் போல இருக்கிறது வரிசையாக கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் என பலர் கட்சியில் இருந்து விலகி விட்டனர். என் மகன் அ.தி.மு.க வில் உயிரே போனாலும் சேர மாட்டான் , என வைகோ அம்மா கூறிய சில நாட்களிலேயே , அம்மாவின் கட்சியில் இணைந்தவர். ஆரம்பம் முதலே ஈழ விடுதலைக்கு குரல் கொடுப்பவர். ஒரு தமிழ் போராளி. பிரபாகரனுடன் எனக்கு தொடர்பு உண்டு என வெளிப்படையாக கூறியவர். போடா சட்டத்தில் கைதாகி , ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்தவர். இவரது செய்கைகள் தமிழ் போராட்டத்தின் கண் இருந்தாலும், இவர் எப்படி அ.தி.மு.க வில் இணைந்தார் என்பது பலரது கேள்வி... அதுவும் வெறும் நாலு சீட்டுக்காக....
இந்த முறை இவரே போட்டியிடுகிறார். பார்போம்........

விடுதலை சிறுத்தைகள்

தலைவரான திருமா, அண்ணல் அம்பேத்கர் வழி நடப்பவர். ஈழத்திற்காக போராடுபவர், உண்ணாவிரதம் இருந்தவர், காங்கிரசை ஒழிப்பதாக கூறியவர், கடைசியில் ஒரு சாதாரண அரசியல் வாதியாக சோனியா காந்தியை அன்னையாக ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.... வெட்கப்பட வேண்டிய விஷயம் தான்.பகுஜன் சமாஜ் என்ற கட்சி , தமிழ் நாட்டில் தனக்கு போட்டியாக வந்து விட்ட இந்த நேரத்தில் குறைந்தது ஒரு M.P யாவது வேண்டும் இல்லையா ? என்று யோசித்திருப்பார் திருமா .. தா.பாண்டியன் சொன்னது போல , சீரும் புலி , சர்கஸ் புலியாக மாறிவிட்டது என்று கூறலாம்.....

பா..

ராம ராஜ்யம் கொள்கை யாக கொண்ட அணி. இந்து என்ற வேப்பிலையை அடித்து , பாமர மக்களை ஒட்டு வங்கியாக மாற்று பவர்கள். பார்ப்பன ஏகாதிபத்திய கட்சி.
கொள்கை ஓன்று தான், ராமர் கோவில் கட்டுவது. இந்து என்று கூறி தன்னை (பிராமிண தத்துவத்தை) மேல் சாதியாக நிலை நிறுத்தி கொள்வது.

பெரியார் இந்த மண்ணில் இருக்கும் வரை ஒரு இடம் கூட தமிழகத்தில் இந்த கட்சி தனித்து வெல்ல முடியாது..

தே.மு.தி.

திராவிடம் என்றால் பொருள் என்ன என்று தெரியாவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்துவிட்டர்கள். ஆரம்பத்தில் சூடாக இருந்தவர் , இப்போது அடங்கிவிட்டார். பேரம் படியவில்லை என்பதால் தனித்து போட்டி இடுகிறார். ஈழம் பற்றி வாய்திறக்காத இவர் எங்கே ஒட்டு போடாமல் போய் விடுவார்களோ என்று, இப்போது தான் பேச ஆரம்பித்து இருக்கிறார். கொள்கைகள் என்று ஓன்று கிடையாத கட்சி..........

..

சமத்துவ மக்கள் கட்சி ஆனால் நாடார் சமூகத்தினரால் இயக்கப்படுகிறது... தன்னை அடிமையாக வைந்திருந்த பார்பான் கட்சியுடன் எப்படி இவர்களால் கூட்டணி வைக்க முடிகிறதோ?.............

நாடாளும் மக்கள் கட்சி

சொல்லும் படி எதுவும் இல்லை. ஒரு சாதி கட்சி அவ்வளவுதான்...............

மக்கள் நலனுக்காக பாடுபடும் கூட்டணி எதுவென்று சல்லடை போட்டு பார்த்தாலும் ஓன்று கூட கிடைக்காது. தமிழ் ஈழ போராட்ட கட்சிகள் ஓன்று கூடி இருந்தால் , ஒரு அரசியல் மாற்றம் நிகழ்ந்து இருக்கும். பாவம் என்ன செய்வார்கள் , கேட்டால் கொள்கை வேறு, தேர்தல் வேறு என்பார்கள்.

இன்றும் ஒரு பிரியாணிக்கும், 100 ரூபாய்க்கும், குவாட்டர் சாராயத்திற்கும் ஒட்டு போடும் மக்கள் நம் நாட்டில் உள்ளனர். இது வேடிக்கை யான விசயமல்ல. இவர்கள் போடும் ஓட்டுதான் நம் தலை எழுத்தை நிர்ணயம் செய்யும். இவர்களை ஆண்டாண்டு காலமாக அடிமையாக வைத்து ஆளவும் வாழவும் பழக்கிக் கொண்டன அரசியல் கட்சிகள்.இதை கேட்க நாதியில்லை.

கேட்கும் ஒரு சிலரையும் ( சீமான், கொளத்தூர் மணி) போன்ற போராளிகளையும் ,தேசிய பாதுகாப்பு சட்டம் கைது செய்கிறது. கேட்டால் இறையான்மையாம், யாருடைய இறையாண்மை கெட்டு விட்டது? சோனியா காந்தியின் இறையாண்மை தானே? இங்கே கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் என்று பேசிய வருன் காந்தி கூட ஜாமீனில் வெளி வந்து விட்டார்.மக்களுக்காக பேசிய கொளத்தூர் மணியால் வெளிவர இயலவில்லை. எந்த தொலை காட்சியாவது அவர்கள் பேசியதை ஒளிபரப்பு செய்ததா? செய்ய மாட்டார்கள். செய்தால் மக்கள் கேள்வி கேட்பார்கள்,பின் யார் ஒட்டு போடுவது?சட்டம் என்பது பாமர மக்களுக்குத்தான், பணம் படைத்த அரசியல் வாதிகளுக்கு அல்ல.

ஒரு சீக்கியன் 1984 லில் நடந்த கலவரத்திற்கு, இன்று சிதம்பரத்தை செருப்பால் அடிக்கிறான். அவரும் மன்னித்து விட்டார். ஆனால் 6000 தமிழ் மக்கள் கொன்று , 1000 தமிழ் பெண்களை கெடுக்க காரணமான ,காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சித்துப் பேசக் கூட தமிழனுக்கு உரிமை இல்லையா? இதுதான் சுதந்திரமா?

ஆம் நாங்கள் (தமிழர்கள்) இளிச்சவாயர்கள் தான்.......

எங்கே செல்கிறான் தமிழன்? IPL மேட்சில் இருக்கும் ஆர்வம் கூட அகதி மீது இல்லையே இவனுக்கு? இவர்கள் விளையாட்டை போராக பார்ப்பவர்கள் , போரை விளையாட்டாக பார்ப்பவர்கள். இவர்கள் தேசபக்தி இந்தியா பாகிஸ்தானை வெற்றி பெரும் போது மட்டும் பீறிட்டு வெளி வரும்.

இவர்களை போன்ற தேச பக்தர்களின் நடுவே, எங்களை போன்ற தேச துரோகிகள் வாழ்வதை விட எங்களுக்கு வேறு என்ன தண்டனை இருக்க முடியும்.............

எழுத்தாக்கம்

ப.சீனிவாசன்

Sunday, April 19, 2009

ஆணாதிக்கம்

பெண்கள் நம் கண்கள்,
பெண் என்பவள் தெய்வம்,
பெண்ணடிமை கூடாது,
ஆணும் பெண்ணும்
சமூகத்தில் சமம்,
என பெண்ணியம் பேசும்
நம் முகத்திரை கிழிந்து விடுகிறது!
ஒரே நொடியில்,

பேருந்தொன்றில்
வயதான பெண் ஒருத்தி
உட்கார இடம் கேட்கும் போது,
பொம்பளைங்க சீட்ன்னா!
ஆம்பளைங்க உட்காரவே கூடாதா?
என்று அதிகாரமாய்
எழ மறுத்ததில்!.........

எழுத்தாக்கம்-ப.சீனிவாசன்

முரண்பாடு

நீல நிற நீண்ட
மகரந்த மலருக்கும்,
சிகப்பு நிற உருண்டை
மகரந்த மலருக்கும்,
கலப்பு செய்து
புதிய சந்ததிகளை தோற்றுவித்ததற்கு ,
தேசிய விருது
பெற்ற விஞ்ஞானிக்கு!
பெண் தேவையாம்,
விளம்பரம் பாரீர்.

32, வெள்ளாள நாயக்கர், M Sc(Botany) PhD., அதே பிரிவில் பெண் தேவை. வேறு பிரிவு தேவை இல்லை.

எழுத்தாக்கம்-ப.சீனிவாசன்

தேச பக்தி

ஏழை விவசாயி எலிக்கறி
தின்ன போதும்,

எலி கூட கிடைக்காமல்,
பட்டினியால் மாண்டபோதும்,

கூட்டம் கூட்டமாக எம் மக்கள்
மதச் சண்டையில் மடிந்த போதும்,

தீண்டாமை பெருக்கெடுத்து
தெருவெல்லாம் ஓடிய போதும் ,

வாழ நாடில்லாமல்
அகதியாக எம்மை விரட்டிய போதும்,

அதற்காக போராடி என் சகமனிதன்
தீக்குளித்து இறந்த போதும்,

வராத தேசபக்தி
என் இளைஞனுக்கு

ஆகஸ்டு 15 , காலை 9 மணிக்கு
அசினின் பேட்டியுடன்
இனிதாய் தொடங்கியது.........

எழுத்தாக்கம்-ப.சீனிவாசன்

Saturday, April 18, 2009

யார் அரக்கன் ? யார் அசுரன்?

அசுரர்களில் கொடிய அசுரன் அந்த காசுரன் என்பவன்.இவன் ஈஸ்வரனை நோக்கி கடும் தவம் புரிந்தான்.மூன்று உலகங்களிலும் தன்னாட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்பதே அவனது பிரார்த்தனை. அவனது கடும் தவத்திற்கு மனம் இறங்கிய சிவன், அவன் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

ஆனால், வரம் பெற்ற மமதையில் அந்த காசுரன், அசுரர்களுக்கே உரிய ஆணவத்துடன் தேவர்களை துன்புறுத்த தொடங்கினான். அவன் அல்லல் தாங்காத தேவர்கள் ஈஸ்வரனிடம் சென்று முறையிட்டனர்.தேவர்களின் துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிவன் தன் நெற்றி கண்ணில் இருந்து காலபைரவரை தோற்றுவித்தார். அவரிடம் இருந்து தோன்றிய அஷ்ட (எட்டு) பைரவர்கள்.64 பைரவர்களாக மாறி அந்த காசுரனை அழித்தனர்.

உயிர் பிரியும் நேரத்தில் அந்த காசுரன் பசியால் துடிக்கிறான் . அங்கு விளைந்திருந்த பூசணிக்காயை பறித்து ,அதை உலகமாக நினைத்து சத்தியம் செய்.பசிக்கு தருகிறேன் என்றார் பைரவர். அப்போது அவன், "எந்த பூசை செய்தாலும் எனக்கும் அதில் மரியாதை செய்யப்பட வேண்டும் என்றான். பைரவரும் அவ்வாறே அருளினார். அதனால் தான் இன்றும் கணபதி ஓமம் ,புதுமண புகுவிழா போன்ற பூஜைகளில் அசுரர்களை திருப்தி செய்ய பூசணிக்காய் உடைக்கப்படுகிறது.

தினத்தந்தி -வெள்ளி மலர் (17/04/09)

ஒரு பகுத்தறிவாதியின் கேள்விகள்.

1. இந்த கதை எங்கு நடந்தது? எப்போது நடந்தது? (கிமுவா , கிபியா)

2. ஒரு உலகம், நாம் வாழும் இடம். மீதி இரண்டு உலகம் எங்கே? யார் சென்று வந்து இருகின்றனர்? எந்த வாகனம் உபயோகப்படுத்தப்பட்டது?

3. அசுரன் என்றால் என்ன? அவன் அங்க அடையாளங்கள் என்ன? உலகின் வேறு நாடுகளில் அசுரன் வாழ்ந்ததுண்டா?

4. ஒரு சர்வ சக்தி வாய்ந்த கடவுளுக்கு தன் பக்தனுக்கு என்ன வரம் வேண்டும் என்று தெரியாதா? (சாதாரண பூனைக்கு தெரிகிறது , தன் குட்டிக்கு என்ன வேண்டும் என்று)

5. இந்த வரம் கொடுத்தால் இந்த மாதிரி பிரச்சினை ஏற்படும் என்று கடவுளுக்கு தெரியுமா? தெரியாதா? தெரியாது என்றால் அவன் என்ன அனைத்தும் அறிந்தவன். தெரியும் என்றால் என்ன வெங்காயத்துக்கு கொடுக்க வேண்டும்?

6. ஒரு சாதாரண அரக்கனை தானே அழிக்காமல் , ஏன் 64 பைரவர்களை தோற்று விக்க வேண்டும்? அப்புறம் என்ன சர்வ சக்தி?

என்னை பொறுத்த வரையில் அந்த காலத்தில் அரக்கர்கள் , அசுரர்கள் என சித்தரிக்கப்பட்டவர்கள் கடவுள் மறுப்பு கொண்டவர்களும், தமிழர்களும் தான். தேவர்கள் என கூறி கொண்டவர்கள் பார்பனர்கள். பெரும்பாலும் அனைத்து இதிகாசம், மற்றும் புராணங்களும் , தேவர்கள் அசுரர்கள் தொல்லை தாங்க முடியாமல் இறைவனை வேண்டுவர். உடனே இறைவன் வருவார் அவதாரம் எடுப்பார் , அரகர்களை அழிப்பார் என்பதை மைய கருத்தாக கொண்டே எழுதப் பட்டிருக்கும். இதன் நோக்கம் சமூகத்தில் அவர்களை உயர்ந்தவர்களாக காட்ட ஏற்படுத்தப்பட்ட வழி முறையே ஆகும்.

ராமாயணம்
பிராமண வேடத்தில் வரும் அனுமானின் காலில் ராமன் விழுந்து வணங்குகிறார். அனுமான் பதறி ராமா, நான் உங்கள் பக்தன் நீங்கள் என் காலில் விழுந்து வணங்குகிறீர்களே என்று கேட்க, அவன் கடவுளே ஆனாலும் , பிராமணன் எதிரில் வந்தால் வணங்க வேண்டும் என்கிறார்.
சம்பூகன் என்ற ஒரு சூத்திரன் தவம் செய்யும் போது , பிராமிணர்கள் ராமரிடம் முறையிட்டு, எப்படி ஒரு சூத்திரன் நேராக கடவுளை தொழ முடியும் ,எங்களை தானே தொழ வேண்டும் என்று கூற, ராமர் வந்து அவனை கொலை செய்கிறான்.

நேரு வே சொல்லி இருக்கிறார் the discovery of india என்ற நூலில் , ராமாயணம் என்பது தென் இந்திய மக்களை இழிவு செய்ய எழுதிய நூல் என்று

மகாபாரதம்
நாரதர் கிருஷ்ணரை பார்க்க வருகிறார். அப்போது கிருஷ்ணன் கதவை பூட்டி வழிபட்டு கொண்டு இருகின்றார் . நாரதர் வியப்புடன் சர்வ சக்தி கொண்ட எம்பெருமானே வழிபடும் கடவுள் யார் என்று ஆவலுடன் பார்க்க , அங்கு ஒரு பிராமண சிலை உள்ளது. அதன் முன் கிருஷ்ணன் அமர்ந்து இருக்கிறார். இதன் பொருள் என்ன?

நான் சமூகத்தில் உயர்ந்தவன் என்று , கடவுளின் பெயரால் சொல்லும் போது, அங்கு மறு பேச்சே கிடையாது. ஆகா ராமனே சொல்லிவிட்டான் , கிருஷ்ணனே சொல்லிவிட்டான், என்று நம்பி விட்டனர்.

இனி கோவில் பூசாரியே , கோவிலுக்குள் வர வேண்டாம் என்றாலும், நம்மவன் கேட்க மாட்டான்.

இங்கு உருவாக்கப்பட்ட அனைத்து கடவுள்களின் கதைகளும் ஓன்று ஆபாசமாக இருக்கும், இல்லை திராவிடர்களுக்கு எதிரானதாக இருக்கும்.

இப்படியாக இருக்கையில் , ஒரு இம்மி அளவு கூட சிந்தனை இல்லாமல் , பழைய புராணபுளுகுகளை நம்பி , தன் நேரம் ,பொருள் என மக்கள் செலவு செய்தும், நேர்த்தி கடன் என்ற பெயரில் தங்கள் உடலை வருத்தியும் , சிறுதும் மானமற்றவர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

அன்று நாம் அசுரன், அரக்கன்,இன்று நாம் அகதி, என்று நாம் தமிழனாக வாழப்போகிறோம்?

.சீனிவாசன்.

Friday, April 17, 2009

அடிமைத்தனத்தை உருவாக்கும் கல்வி முறை

தற்கால ஆசிரியர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு, அத்தொழிலைத் தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாய் இருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப் போசுவதும், தீர்மானிப்பதும், தங்களுக்குச் சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியை அடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.

முதலாவது, நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால், தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவிசெய்து, வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் எந்திரங்களாகத்தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?

நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள், அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6, 7 வயது வரையிலும் தாய்மார்களேதான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால், அப்போர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளை பெறும் எந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்?

நீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்களைவிடப் பெரிய சகலகலா வல்லபர்களிடத்தில் படித்து, எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான்; தன் தேசத்தையும், மக்களையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டிப் போடுகிறான்.

வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ, அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திர பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படிப் பூகோளப் பாடம் தெரியாதோ, அப்படியே எம்.ஏ. படித்தவனுக்குப் பிறருக்குச் சவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது.

ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படிக்காதவர்கள் பரோபகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம். நமது நாட்டின் கேட்டிற்கும் நிலைமைக்கும் முதல் காரணம், தற்காலக் கல்வி முறை என்பதே எனது அபிப்ராயம்.

எனவே, இவை ஒவ்வொன்றையும் இன்னமும் கிளற, கிளற மிகவும் மோசமாகவேதான் வந்து கொண்டிருக்கும். இம் மகாநாட்டைப் பொறுத்த வரையிலும், இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப் பொறுத்த வரையிலும் உங்களுக்கிருக்கும் கஷ்டங்களையும், குறைகளையும் அறிந்து நான் மிகவும் அனுதாபப் படுகிறேன். உங்களுக்கு இன்னும் சம்பளம், மரியாதை முதலியன உயர வேண்டுமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்காக நீங்கள் செய்யும் கிளர்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையிருக்கிறது. ஆனால், அந்நோக்கங்களையும் கிளர்ச்சிகளையும் உங்கள் சுய நன்மைக்கு மாத்திரமென்றில்லாமல், நமது மக்களின் உண்மையான ஆரம்ப ஆசிரியராய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

24.4.1927இல் போளூரில் நடைபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை.

சிவபெருமானின் சிருங்கார லீலை

சிவபெருமான்தான் கடவுள்களின் தலைவன், இவன் யாருக்கும் பிறந்தவனல்ல. தானாகவே தோன்றியவன் (சுயம்பு).

ரிஷிமூலம், நதிமூலம் போல், இவன் பிறப்பு மூலத்தையும் ஆராயக்கூடாது. பிரம்மனையும், விஷ்ணுவையும் இவன்தான் தோற்று வித்தவன். இந்த இரு கடவுளும் கூட சக்தியின் முகத்திலும் தோளிலும் பிரசவமானவர்களாம்!

"நமசிவாய"என்னும் அய்ந்தெழுத்தை(பஞ்ச அட்சரம்) பிரமனுக்குப் போதித்தவனும் சிவன்தான்.

ஒரு காலத்தில் தன்னைத்தேடி ஓடிவந்த தேவர்களிடம் என்ன - ஏது? என்று கேட்க சிவனுக்குத் தாருகாவனத்து ரிஷிகளின் தலைக் கனம் புலப்பட்டது. ரிஷிகளின் கனத்தைவிட , ரிஷி பத்தினிகளின் கனமும் - ( தலைக்கனந்தான்) சிவனின் கவனத்திற்கு வந்தது.

கனத்தை இறக்கி, அந்த 'அற்ப'ஆத்மாக்களுக்கு நல்ல குணத்தை ஏற்படுத்துவதாக வாக்களித்தான் சிவன். தேவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

விஷ்ணுவை அழைத்தான் சிவன் "மோகினி உருவெடுத்து, தாருகாவனத்து ரிஷிகளின் மோகத்தை ஒரு கை பார்" எனத் தனக்குக் கட்டளை பிறந்ததும், தளுக்குக் குலுக்குடன் விஷ்ணு தத்தித் தாவினான் தாருகாவனத்திற்கு.

மோகினியாய் மாறிய விஷ்ணு ரிஷிகளுக்கு ருசிகளை வழங்கி கலங்கிக் கிடந்த வேளையில்.

ரிஷி பத்தினிகளின் படுக்கை அறைப் பசி, பட்டினிகளுக்குப் பருவப் பார்வையால் பதில் தெளித்துவந்தான் சிவன்.

அதுவும் சிவனாக அல்ல; பைரவர் வேடத்தில்.

தங்கள் தங்கள் மனைவிமார்கள் எங்கெங்கே, என்னென்ன செய் கிறார்கள் என்பதை அறிய, தங்கள் 'ஞானதிருஷ்டி' யக் கூட முடுக்கிவிட மறந்தவாறு மோகினி காட்டிய சொர்க்கத்தில் மூழ்கித் திளைத்தனர் ரிஷிகள்.

ரிஷி பத்தினிகளின் கதையும் இதேதான்.

வந்தது யார் என அடையாளம் நோக்காமல், அணைத்து மகிழ்ந்து ஆசை தணிந்தபின் "போச்சே கற்புப் போச்சே" என்று கூவினர்.

பதிவிரதத்தில் பங்கமும், பழுதும் பற்றி விட்டதைப் பாருக்குணர்த்த, கூச்சலே உபாயம் எனக் கருதினர் போலும்.

பார்த்தான் சிவன்; பருவச்சுவையினைப் பருகி உருகிய பத்தினிகள் பதறிப் புலம்புவதையும், கதறிக் குழம்புவதையும் பார்க்கப் பார்க்கப் பொறுக்கவில்லை அந்தச் சிவனுக்கு.

ரிஷிகளும் வந்தனர். தமது தர்மப் பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவன் சிவன் என அறிந்ததும் 'சிவனே' ன்று சிலர் குந்தினர். "சிவ- சிவ"என்று சிலர் பொங்கினர்.

பெரியவர் செய்தால் பெருமாள் செய்த மாதிரி என்ற சொல்லின் மூலம் இதுதான் தனக்குப் பிராயச்சித்தப் பரிகாரமும் இறுதியில் சிவன் சொன்னான்.

"ரிஷிகளே ! 'அபிசார' வேள்வி செய்யுங்கள் ஆகட்டும் பார்க்கலாம்" என ஓடிவிட்டான். அபிசார வேள்வி என்பது -ஒரு பிராயச்சித்தக் காரியமாம்.

ரிஷிகள் வேள்வி செய்தனர். என்னதான் செய்தாலும் கோபம் கொழுந்து விடாமல் இல்லை.

உடுக்கை, அக்னி, மழு, சூலம் இவற்றை அவர்கள் ஏவ, அதனைக் கையால் பிடித்தான் சிவன், காலங்காலமாய்ச் சுமக்கிறான்.

சர்வ சாதாரண "வழக்குச்சொல்" சிலவற்றிற்கே "சிவ சிவ" என்று காதை கைகளை விட்டுக் கவ்விடும் சிவனடித் திருக்கூட்டங்களே சில சந்தேகங்கள்:

1) முன்னைப் பழமைக்கும் பழைமையாய் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் வர்ணிக்கப்படும் சிவன், தானாய்த் தோன்றியது எப்படி? அப்படியே இருந்தாலும், சக்தியை அவன்தான் ஆக்கினான் என்றாகிறது. இது உண்மையென்றால் மக்களைப் புணர்ந்தவன்தான் மகேசனா?

2) சக்தியின் முகத்திலும், தோளிலும் பிரமனும் விஷ்ணுவும் பிறந்த கூத்து பிரமாத வித்தைதான்! அப்படியானால், பார்வதி அம்மாளுக்குப் பரிபக்குவமான பாதைகள் எத்தனை?

3) தனக்கு வாழ்த்துச் சொல்லுகின்ற நமசிவாய என்ற பஞ்சாட் சரத்தை தானே போதிப்பதென்பது தற்புகழ்ச்சித் தன்மையல்லவா? எல்லாம் வல்ல ஆண்டவனுக்கு அடுக்குமா இந்தக் குணம்?

4) சிலர் தலைக்கனம் பிடித்துத் திரிந்தலைந்ததற்குக் கற்பழிப்பது என்ன முறை?

5) அம்மி மிதித்து, அருந்ததி பார்த்துக் கட்டுக்குலையா பத்தினிகள் கிடைத்தும், திடீர் வரவு மோகினியிடம் திருட்டுச் சுவை காண்பவன் தான் ரிஷியா?

6) கற்பழித்த பாவம். வேள்வி செய்தால் கேள்வியின்றிப் போகுமா? பிராயச்சித்தம் இப்படித்தான் என்றால், சிவனடியார்களும் இப்படிச் செய்யத் தயாராய் இருப்பவர்களைக் கண்டும் காணாதுவிடத் தயார்தானோ?

(ஆதாரம் : அபிமான சிந்தாமணி பக்கம் 659)

சிரிப்பிற்குரிய ராமன் பிறப்பு

அயோத்தியை ஆண்டுவந்தான் தசரதன். கொஞ்சநஞ்ச கால மல்ல இவன் ஆட்சி , சுமார் அறுபதினாயிரம் ஆண்டுகளாய் ஆட்சி நடத்தியவன் தசரதன். இவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூவர் பட்டத்துக்குரிய மனைவிகள்; வேறு அறுபதினாயிரம் பெண்கள்; இஷ்டத்துக்கு வரும் இன்பராணிகள். இத்தனை இருந்தும் மழலை இல்லாத மலட்டு வாழ்க்கையில் மனம் வெறுத்துக் கிடந்தான் தசரதன்.

"பிள்ளைபெறுவது எப்படி?" என ஆலோசனை நடத்தினான். அமைச்சர்களும் அடிக்கடி வந்துபோகும் முனிவர் வசிஷ்டரும் அசுவமேத யாகத்தால் குழந்தையைப் பெறலாம் எனத் தீர்மானித்துச் சொன்னார்கள். அசுவமேதயாகம் என்பது - தனி வல்லுனர்களை வைத்துச் செய்யவேண்டிய ஒன்று என்றும் விளக்கினார்கள் அவர்கள்.

கலைக்கோட்டு முனிவன் என்பவன் இதில் பேர் போனவன். அவனை இழுத்து வருவது என்றால் இலேசுப்பட்ட காரியமல்ல. ஒரு வழியாய் "அதையும் இதையும்"கொடுத்து சரயு நதியோரம் இம்முனிவன் இழுத்துவரப்பட்டான். கலைக்கோட்டு முனிவனின் தலைமையில் யாகம் துவங்கியது . சம்பிரதாயப்படி தசரதனின் முதல் மனைவியான கோசலை. யாகக் குதிரையைச் சுற்றிவந்து, அதனை மூன்று வெட்டாக வெட்டிக் கொன்றாள். பின்னர், துடிதுடித்த குதிரை முண்டங்களுடன் இரவு முழுதும் அணைத்து, தனது துருதுருப்பைக் கழித்துக் கட்டினாள்.

காலை புலர்ந்தது. கோசலை குதிரை முண்டங்களில் இருந்து எழுந்ததும் தசரதனிடம் போனாள். தசரதனின் மற்ற இரு பட்டமகிஷிகளான கைகேயியும், சுமத்திரையும் அவனருகில் ஏற்கனவே நின்று கொண்டிருந்தனர்.

யாகவேள்வியில் கலைக்கோட்டு முனிவனுக்கு எடுபிடிகளாக இருந்த அத்வர்யு, ஹோதா மற்றும் உகதா ஆகிய மூன்று குட்டி முனிவர்களை அழைத்துத் தனது மூன்று மனைவிகளைத் தற்காலிக தானம் செய்தான் தசரதன். முனிவர்கள் மூவரும் தசரதனின் மனைவியரை அழைத்து கூத்தடித்தனர்.

பின்னர், அவர்களையும் சலிப்படைய வைத்துவிட்டனர் இந்தத் தசரதப் பத்தினிகள்."இவர்களை வைத்துக்கொள்; பொன்னாகப் பொருளாகக் கொடு" என்று முனிவர்கள் பொருள்பறி நடத்திவிட்டு நடந்துவிட்டனர். அன்றே தசரதனின் மனைவியர் மூவரும் கருவுற்றனர்.இக்கருக்களின் உருக்களே ராமனும், அவன் இளவல்களும்.

விஷ்ணு பற்றிய கதைப்படி, இந்த ராம அவதாரமென்பது விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்று.

இந்த யாக விவரமெல்லாம், வால்மீகி ராமாயணத்து 14 -ஆம் சருக்கத்தின் விளக்கம். மொழி பெயர்த்தவர் பண்டிதஅனந்தாச்சாரியார்.

பண்டித மன்மத நாததத்தர் என்பவர் இந்த யாக நிகழ்ச்சியில் கோசலையின் பங்கை இங்கிலீஷின் மொழி பெயர்த்துள்ள வரிகளும், தசரதன் தன் பத்தினிகளை இரவல்வழங்கியதும் வருமாறு:

"Kausalya with three strokes slew that horse ex- periencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. The Hotas. Adhwaryus and the Ugatas Joined the king’s wives’. என்று குறிப்பிட்டுள்ளார்.

கோசலைக்கு ராமனும், கைகேயிக்குப் பரதனும் சுமத்திரைக்கு லட்சுமணன் மற்றும் சத்துருக்கனனும் பிறந்தனர்.

ராமனின் பிறப்புக் கதை இது. இவனின் சிரிப்புக் கதைகள் வேறு இருக்கின்றன. பக்தர்களே!

1. அறுபதினாயிரம் ஆண்டுகால ஆளுகை; அதே எண்ணிக்கைப்

பெண்களுடன் கேளிக்கை! இதென்ன வேடிக்கை? மந்திர

தந்திரக் கதைக்காரனின் அளப்பையும் ஆழப்புதைக்கிறதே இது!

2. பட்டத்து மனைவிகள் மூவர்; தனது கொட்டத்துக்கும்

கும்மாளத்துக்கும் என்று 60 ஆயிரம் அணங்குகள் என்றால்,

தசரதன் என்ன தசையுடலால் ஆனவனா, அல்லது

இரும்புலக்கைப் பேர்வழியா?

3 கலைக்கோட்டு முனிவனை இழுத்துவர, ஒரு கூட்டிக்

கொடுக்கும் வேலை கையாளப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி

யான பச்சை ருசி பரவசந்தான் முனிவர்களாகத் தகுதி வரம்பா?

4 கோசலை பஞ்ச கல்யாணிக் குதிரையை வெட்டிக் கூறாக்கி

அந்த முண்டங்களுடன் ஒட்டியும் கட்டியும் கிடந்து ஒரு

இரவைக் கழித்தாள் என்பது மிருகத்தனமா, இல்லையா?

சொல்வதானால், மிருகத்தனத்தில் கூட இத்தனை விரசம்

இருக்காது. ஒரு தெய்வப் பிறவியின் கரு உருவானது இப்படித்

தான் என்றால் அந்தக் கடவுளைக் கும்பிடுபவர்கள்

யோக்கியமான ஒன்றுக்குத் தாசர்கள் என்றுசொல்ல முடியுமா?

5 குட்டி முனிவர்களுடன் கொட்டமடித்து மகிஷிகளை விட்டுப்

பிடிக்கும் கூத்து மானமுள்ளவனால் செய்யக்கூடியதா?

மானங்கெட்ட அப்பனுக்கும், ஆயிக்கும் வந்தவனுக்கும்,

போனவனுக்கும் பிறந்தவன் தான் தெய்வப்பிறவியா?

6. கிய மலர்களான தனது பத்தினித் தங்கங்களைப்

பெற்றுக்கொண்டு. பொன்னும், பொருளும் தந்துதவும்

வரம்பெற்ற வள்ளல் தன்மை இருந்தால் தான் தெய்வங்களின்

தகப்பன் பட்டம் கிடைக்கும் போலும்!

7. இப்படிப் பிறந்த ஒரு அசிங்கப் பிறவியின் ஆதரவை நாடி,

"ராமஜெயம்"எழுதி வெள்ளைத்தாள்களை விரயமாக்கும்

போக்கு இனியும் தேவைதானா?

நன்றி- பெரியார் வலை பக்கம்