பெண்கள் நம் கண்கள்,
பெண் என்பவள் தெய்வம்,
பெண்ணடிமை கூடாது,
ஆணும் பெண்ணும்
சமூகத்தில் சமம்,
என பெண்ணியம் பேசும்
நம் முகத்திரை கிழிந்து விடுகிறது!
ஒரே நொடியில்,
பேருந்தொன்றில்
வயதான பெண் ஒருத்தி
உட்கார இடம் கேட்கும் போது,
பொம்பளைங்க சீட்ன்னா!
ஆம்பளைங்க உட்காரவே கூடாதா?
என்று அதிகாரமாய்
எழ மறுத்ததில்!.........
எழுத்தாக்கம்-ப.சீனிவாசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment