Thursday, April 23, 2009

ஈழம், அரசியல் மற்றும் தமிழன்

வெள்ளியில் மறித்து, ஞாயிறில் உயிர்த்தெழ கர்த்தருக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. ஈழத்தமிழனுக்கு அதுவும் இல்லை.

சிங்கள குண்டுகளால் சதை பிளந்து, ரத்தம் பீறிட்டு, உறுப்புகள் சிதைந்து, செத்துபோவதை தவிர அவனுக்கு வேறு வாய்ப்பில்லை.தமிழன் செத்தால் கேட்பதற்கு ஒரு நாதியும் இல்லை.

ஆம் இப்போது ஈழத்தின் தமிழன் கடவுளாலும் கைவிடப்பட்டவன்.
இந்த யுத்தத்தை மிக நேரடியாக நடத்துவது இந்தியா தான்.குறிப்பாக, காங்கரசும் சோனியா காந்தியும் தான் இதன் சூத்திரதாரிகள்.ஆனால் தமிழர்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்திக்கொண்டு, அதே தமிழர்களிடம் எந்த பயமும், மனசாட்சியும் இல்லாமல் ஓட்டு வாங்க வருகிறார்கள்.

" நாய் அடிபட்டு செத்தால் கூட ப்ளூ கிராஸ் வரிகிறது. காசாவில் பாலஸ்தீனியர்கள் தாக்கப்பட்டால் உலக நாடுகள் அலறுகின்றன.ஆனால், மனித குல வரலாற்றில் ஹிட்லரையும் மிஞ்சிவிட்ட மகிந்திரா ராஜபக்ஷேவை அதட்டி ஒடுக்க சர்வதேசங்களுக்கு தயக்கம்.காரணம் இந்தியா.

தெற்க்காசிய பிராந்தியத்தின் பேட்டை ரவுடியாக இருக்கும் இந்தியாதான் இலங்கை போரை நடத்துகிறது என்பதால், இந்த பிரச்னையில் தலையிட மற்ற நாடுகள் தயங்குகின்றன.

ஈழதமிழனுக்கு எதிரான போரை முன்னின்றும் பின்னின்றும் நடத்தும் காங்கரஸ் அரசு, சோனியா காந்தியும் நாளை தமிழ்நாட்டு தமிழனுக்கு எதிராகவும் திரும்ப மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?

இறப்பின் வலி சோனியாவிற்கு தெரியும். ஒற்றை உயிரை இழந்ததர்க்கே அவருக்கு இவ்வளவு வலி இருக்கும் என்றால், லட்சகணக்கான தமிழர்களை கண்ணுக்கு முன்னால் சாககொடுக்கும் எங்களுக்கு எவ்வளவு வலி இருக்கும்?

சீக்கியர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பீர்கள், தமிழன் என்றால் ராணுவத்தை அனுப்பி கொலை செய்வீர்கள். நாங்கள் மட்டும் இந்தியர்கள் இல்லையா?

கொலை செய்தவனை விட கொலைக்கு திட்டம் தீடியவனும், ஆயுதம் கொடுத்தவுனுமே பெரிய குற்றவாளிகள். அந்தவகையில் இந்தியாதான் மிகபெரிய குற்றவாளி.

இந்த கொடுமையை எதிர்த்து நம்மால் போரிட முடிய வில்லை அதனால் நாம் போராளிகளோ அல்லது வீரர்களோ இல்லை.

முத்துக்குமரைபோல தற்கொலை செய்து கொள்ள நாம் கோழைகளோ இல்லை.

நாம் அனைவரும் கைஆலாகாதவர்கள் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

நம் வாழ்க்கை நம் சூழல் என்று வாழும் இந்த நிலையில் மற்றவர்களுக்காக வெறும் அனுதாபம் மட்டும் தான் நம்மால் தர முடியும்.
ஆனால் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக,இந்த இனப்படுகொலையை எதிர்த்து இருபது பெண்கள் சென்னையில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவகமான தாயகத்தில் 10 நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

முடிந்தால் நாம் அனைவரும் அந்த உண்ணாவிரத பந்தலுக்கு சென்று அவர்களை சந்தித்து நம் ஆதரவை தெரிவிப்போம்.


ப.ச.பன்னீர் செல்வம்

1 comment:

  1. ungaludaya intha website puthiya karuthukalai kondathai ullathu. melum intha web site moolam ambedkar history patry arintha kolla virumbukiren.

    -Radhakrishnan.s

    ReplyDelete