ஏழை விவசாயி எலிக்கறி
தின்ன போதும்,
எலி கூட கிடைக்காமல்,
பட்டினியால் மாண்டபோதும்,
கூட்டம் கூட்டமாக எம் மக்கள்
மதச் சண்டையில் மடிந்த போதும்,
தீண்டாமை பெருக்கெடுத்து
தெருவெல்லாம் ஓடிய போதும் ,
வாழ நாடில்லாமல்
அகதியாக எம்மை விரட்டிய போதும்,
அதற்காக போராடி என் சகமனிதன்
தீக்குளித்து இறந்த போதும்,
வராத தேசபக்தி
என் இளைஞனுக்கு
ஆகஸ்டு 15 , காலை 9 மணிக்கு
அசினின் பேட்டியுடன்
இனிதாய் தொடங்கியது.........
எழுத்தாக்கம்-ப.சீனிவாசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment