Sunday, April 19, 2009

தேச பக்தி

ஏழை விவசாயி எலிக்கறி
தின்ன போதும்,

எலி கூட கிடைக்காமல்,
பட்டினியால் மாண்டபோதும்,

கூட்டம் கூட்டமாக எம் மக்கள்
மதச் சண்டையில் மடிந்த போதும்,

தீண்டாமை பெருக்கெடுத்து
தெருவெல்லாம் ஓடிய போதும் ,

வாழ நாடில்லாமல்
அகதியாக எம்மை விரட்டிய போதும்,

அதற்காக போராடி என் சகமனிதன்
தீக்குளித்து இறந்த போதும்,

வராத தேசபக்தி
என் இளைஞனுக்கு

ஆகஸ்டு 15 , காலை 9 மணிக்கு
அசினின் பேட்டியுடன்
இனிதாய் தொடங்கியது.........

எழுத்தாக்கம்-ப.சீனிவாசன்

No comments:

Post a Comment